வியாழன், 30 ஏப்ரல், 2015

நீதிமன்ற தீர்ப்புகளும் பாமரனின் சந்தேகமும்




தமிழக முதல்வர் அம்மாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடக சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று அதன் மேல் முறையீடு தற்பொழுது உயர் நீதி மன்றத்தில் ந்டை பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. வழக்கு குறித்தோ வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தோ நிறைய விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. நம்முடைய நோக்கம் அவற்றை பற்றி விவாதிப்பது அல்ல. இவ்வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தின் சில உத்தரவுகள் நம்மை ஆச்சரியபடுத்துகின்றன.மேல் முறையீட்டின்போது கர்நாடக அரசு ஏன் வழக்கறிஞரை நியமிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? வழக்கின்போது திரு பவானி சிங் ஆஜராகக் கூடாது என திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டபோது அதனை நிராகரித்த உயர் நீதிமன்றம் உச்ச நீதீ மன்றத்தில் வழக்குத் தொடர அறிவுறுத்தியது.திமுக சார்பில் உச்ச நீதீ மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்ட போது மேல் முறையீட்டு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க ஏன் உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.? வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக வேண்டிய தருணத்தில் திரு பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது தவறென்றும் எனவே புதியதாக ஒரு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டுமெனவும்,ஆனால் அதற்காக மறு விசாரணை நடத்த தேவையில்லை எனவும் திரு பவானி சிங்கின் வாதங்களை புறக்கணித்து விட்டு புதிய வழக்கறிஞர் எழுத்து மூலமாக கொடுக்கவுள்ள ஆதரங்களை பரிசீலனை செய்து தீர்ப்பு வழங்கவும் என ஒரு வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. திரு பவானி சிங் வாதிட்ட அந்த நாட்கள் எல்லாம் தேவையின்றி உயர் நீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தது போல் ஆகவில்லையா? திமுக மனு தாக்கல் செய்தவுடனேயே வழக்கு விசாரணையை நிறுத்த உத்தரவு பீறப்பித்துவிட்டு, பவானி சிங் நியமனம் தொடர்பான வழக்கு முடிவடைந்தவுடன் விசாரணையை மேற்கொண்டிருக்கலாமே என்பதுதான் எங்களை போன்று சட்டம் படிக்காத பாமரர்களின் கேள்வியாக இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக