திங்கள், 31 ஜூலை, 2017

கருவேல மரங்களும் திருத்தப் பட்டத் தீர்ப்பும்





மதுரை உயர் நீதி மன்றம்,  நிலத்தடி நீரை பாதிப்பதால் சீமை கருவேல மரங்களை முற்றிலுமாய் அகற்ற வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு தீர்ப்பு வழங்கியது. அப்பொழுது " சீமை கருவேல மரங்களும் யதார்த்தமில்லாதத் தீர்ப்பும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எனது வலை பக்கத்தில் எழுதி அதனை முக நூலிலும் பகிர்ந்திருந்தேன்.

அந்தக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். " அந்த கால மன்னர்கள் அரண்மனையில் இருந்து கொண்டு அமைச்சர்களை விசாரிப்பார்களாம் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. அதைப் போலவே எதார்த்ததை அறியாமல் இந்தத் தீர்ப்பும் அதன் தொடர் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தத் தீர்ப்பு குறித்து பாமரராகிய நமக்கு பல ஐயங்கள் எழுகின்றது.

ஏறத் தாழ  40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் பரவி கிடக்கின்றன. இவ்வளவு காலங்கள் இல்லாமல் இம் மரங்களினால்தான் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக எப்படி கண்டறியப்பட்டது. ஏதேனும் அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டதா?  ஒரு ஏக்கரில் இந்த மரங்கள் இருந்தால் அந்தப்பகுதியில் நீர் வளம் எத்தனை ஆண்டுகளில்பாதிக்கப்படும் என புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதா?

ஒரு மாத கால அவகாசத்தில் தமிழகத்தில் உள்ள அத்தனை சீமை கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம்தானா? புறம்போக்கில் உள்ள மரங்களை அகற்றவே ஒரு வருடத்திற்கு மேலாகாதா?"

இதற்கிடையே கருவேல மரங்கள் வெட்டப்படுவதால் மாநிலத்தின் சில பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதால் இவ்வாறு வெட்டுவதற்குத் தடை கோரி ஒருவர் உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமை கருவேல மரங்களினால் நிலத்தடினீர் ஆதாரம் பாதிப்படைகிறதா என கண்டறிய உயர் வனத்துறை அலுவலரின்(வனத்துறை முதன்மை பாதுகாவலர்) தலைமையின் கீழ் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு  கடந்த 29.07.17 அன்று தனது விசாரணை அறிக்கையினை நீதி மன்றத்தில் சமர்ப்பித்தது.

நிபுணர் குழுவின் பரிந்துரை. 

(நீர் நிலைகளில் உள்ள கருவேல மர்ங்களை மட்டு மல்ல எந்த மரங்களாயிருந்தாலும் வெட்டப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே)

இப்பரிந்துரையின்   அடிப்படையில் நீதி மன்றம் இவ்வாறானத் தீர்ப்பை வழங்கியுள்ளது.




உரிய ஆய்வு செய்யப்படாமல் கருவேல மரங்களை வெட்டுவது ஏன் என் நான் கேள்வி எழுப்பியபோது, எனது வலை பக்கத்தில் கடுமையான கண்டன்ங்கள் வந்தது. ஏதோ கருவேல மரங்களினால்தான் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் வந்துவிட்டதுபோல் அதை வெட்டியே தீர வேண்டும் என பலரும் தெரிவித்தனர். இன்று உயர் நீதி மன்றம் ஒரு சரியானத் தீர்வை வழங்கியிருக்கிறது.



நம்முடைய தமிழகத்தில் அரசியவாதிகளாயிருந்தாலும், அதிகாரிகளாய் இருந்தாலும் , நீதி மன்றங்களாய் இருந்தாலும், பொது மக்களாயிருந்தாலும் எல்லோரும் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்கிறார்கள். அறிவுப் பூர்வமான அறிவியல் பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும்பொழுது மட்டுமே நாடு முன்னேறும்!




புதன், 1 மார்ச், 2017

தேவை அடிப்படை அரசியல் மாற்றங்கள்



பிஜேபியின் உறுப்பினரான திரு வருண் காந்தி, எம் எல் ஏ மற்றும் எம் பிக்களைத் திரும்ப அழைப்பதற்கான சட்டம் இயற்றக் கோரி தனி நபர் மசோத ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான ஒரு சட்டம் இய்ற்றுவது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் எனத் தெரியவில்லை. ஆனால் நமது அரசியல் சட்டத்தில் அடிப்படையான சில மாற்ற்ங்களை செய்ய வேண்டியது காலத்தின் கட்டயமாகிறது. நம்முடைய சட்டம் அரசியல்வாதிகளில் 80% யோக்கியர்களாயிருந்த போது வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமை அப்படியில்லை. எனவேதான் கீழ் கண்ட மாற்றங்களை கொண்டுவர அரசுத் தீவிரமாகப் பரீசிலனை செய்ய வேண்டும்.

1. தேர்தல்கள் 4 ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.

2. ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டிற்குள் மரணமடைந்தாலோ       அல்லது பதவி விலகினாலோ மட்டுமே இடைத் தேர்தல் நடத்தப்பட        வேண்டும். ஓராண்டிற்கு மேலாகிவிட்டால் அந்தத் தொகுதியின் பொறுப்பை    பக்கத்துத் தொகுதி உறுப்பினர் வசம் ஒப்படைக்கலாம்.

3. ஒரு நபர் இரண்டு தடவைக்கு மேல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்          கூடாது.

4 ஒருவர் ஏதேனும் ஒரு குற்ற வழக்கில் ஏதேனும் ஒரு நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டால் அவர் மேல்முறையீடுகளில் நிரபராதி என விடுவிக்கப்படும் வரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

5. அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகள் மொத்தமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் 75% தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். அதே போலவே மா நில கட்சிகள்  75% சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும்.

6. சட்ட மன்றம் அல்லது நாடாளுமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இல்லாதவர்கள் அமைச்சர்களாகவோ முதல்வராகவோ பிரதமராகவோ அல்லது வேறு பதவியிலோ அமர்த்தப்படக் கூடாது.

7. உறுப்பினர்களின் தேர்வுத் தொடர்பாக குறித்து வழக்குகள் எதேனும் வருமாயின் அந்த வழக்குகளை உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு நீதி மன்றம் அமைத்து இரு மாதங்களில் தீர்ப்பு வழங்கப் பட வேண்டும். மேல் முறையீடுகள் அனுமதிக்கப்படக் கூடாது. வழக்கு முடியும் வரை  அந்த உறுப்பினரின் நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும். மன்ற நடவடிக்கைகளில் வாக்களிக்கவும் அனுமதிக்கக் கூடாது.

8.ஒன்றுக்கும் உதவாத ஆளுனர் பதவியை அகற்ற வேண்டும். அசாதரண சூழ் நிலைகளில்  அந்தந்த மா நில உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவரின் பிரதி நிதியாக நியமித்து  பிரச்சனைகளத் தீர்க்கலாம். 

9. நாடாளு மன்றம் மற்றும் சட்ட மன்ற நடவடிக்கைகளை முடக்குகின்ற உறுப்பினர்களை உடன் பதவி நீக்கம் செய்வதுடன் அவர்கள் அடுத்த பத்தாண்டிற்குத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 

10. ஒரு முறை போட்டியிட்டு 5% குறைவாக  வாக்கு பெறுபவர்களை அடுத்த இரண்டுத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

இது போன்ற இன்னும் பல மாற்றங்களை பொது மக்களிடமிருந்துப் பெற்று அவற்றை நடைமுறைபடுத்த வேண்டும்

சனி, 18 பிப்ரவரி, 2017

சீமை கருவேல மரங்களும் யதார்த்தமில்லாதத் தீர்ப்பும்






போதும் போதுமென்ற அளவிற்கு அரசியல் பேசி தீர்த்தாகிவிட்டது. சசிகலா முதல்வராகி நடராஜன் துணை முதல்வரானாலும் அது திமுகவை விட பெட்டர் என ஒரு சாராரும்அதிமுகவைவிட பெட்டர் என வேறு ஒரு சாராரும் கருதுவதால் அனைவரும் அவர்களை ஏற்றுகொள்ளத் தயாராகிவிட்டார்கள் எனத் தெரிகிறது. நமக்கு மட்டும் ஏன் பொல்லாப்பு..அவர்கள் கொடுக்கப் போகும் விலையில்லா செல் போனை வாங்கிக்கொண்டு சின்னம்மாவிற்கு ஜே போட்டுவிட்டு போவோம். 

இப்பொழுது நான் பேச வந்த விஷயமே வேறு மதுரை உயர் நீதி மன்றக் கிளை சென்ற வாரம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நிலத்தடி நீர் குறைவிற்கு காரணமாய் இருக்கும் தமிழகத்தில் உள்ள  சீமை கருவேல மரங்களை  வரும் பிப்ரவ்ரி25 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவு அளிக்கப்பட்டிருக்கிறது. தமிழக நிர்வாகம் உடனே செயலில் இறங்கி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் இறங்கி பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. "தங்கள் நிலத்தில் உள்ள மரங்களை அவர்களாகவே அகற்ற வேண்டும். இல்லை எனில் அரசு அதனை அகற்றி விட்டு அதற்கான செலவுத் தொகையையும் அபராதத் தொகையினையும் அவர்களிடமிருந்து வசூலிக்கும்".

அந்த கால மன்னர்கள் அரண்மனையில் இருந்து கொண்டு அமைச்சர்களை விசாரிப்பார்களாம் மாதம் மும்மாரி பொழிகிறதா என்று. அதைப் போலவே எதார்த்ததை அறியாமல் இந்தத் தீர்ப்பும் அதன் தொடர் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தத் தீர்ப்பு குறித்து பாமரராகிய நமக்கு பல ஐயங்கள் எழுகின்றது.

ஏறத் தாழ  40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இந்த மரங்கள் பரவி கிடக்கின்றன. இவ்வளவு காலங்கள் இல்லாமல் இம் மரங்களினால்தான் நிலத்தடி நீர் குறைந்து வருவதாக எப்படி கண்டறியப்பட்டது. ஏதேனும் அறிவியல் ஆய்வு நடத்தப்பட்டதா?  ஒரு ஏக்கரில் இந்த மரங்கள் இருந்தால் அந்தப்பகுதியில் நீர் வளம் எத்தனை ஆண்டுகளில்பாதிக்கப்படும் என புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்டதா?

40 ஆண்டுகளில் ஏரி குளம் ஆறுகள் இவற்றின் மீது கட்டிடங்கள் கட்டப்பட்டதால் நிலத்தடி நீருக்கு எந்த பாதிப்பும் இல்லையா? அப்படி பாதிப்பு இருக்குமாயின் ஏன் அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் காப்பாற்றப் படவில்லை?

ஒரு மாத கால அவகாசத்தில் தமிழகத்தில் உள்ள அத்தனை சீமை கருவேல மரங்களை அகற்றுவது சாத்தியம்தானா? புறம்போக்கில் உள்ள மரங்களை அகற்றவே ஒரு வருடத்திற்கு மேலாகாதா?

சீமை கருவேல மரங்களை பொது மக்கள் தாங்களாக விரும்பி வளர்க்கவில்லை. அரசுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விறகு ப ஞ்சத்தைத் தீர்க்க ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் முழுவதும் தூவி வளர செய்தது.ஆனால் அதனை மக்கள் தாங்களாகவே  அகற்ற வேண்டும் என்றும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்பது என்ன நியாயம்?நீர் வளத்தை பாதுகாக்க  அரசுதானே அந்த செலவினை ஏற்க வேண்டும்? ஏற்கனவே வறட்சியினால் அவதிப்பட்டு நிவாரணத்தை எதிர் நோக்கி இருக்கும் விவசாயிகள் இந்தப் பணியினை எப்படி மேற்கொள்ள முடியும்? நீர் ஆதாரங்களை பல வகையிலும் வீணடிக்கும் சமூக விரோதிகளை எல்லாம் விட்டுவிட்டு தொடர்ந்து ஏழை கிராமப் புற மக்கள் மீதும்விவசாயிகளையும் தண்டிப்பது ஏன்?

ஆனால் இவற்றை எல்லாம் அரசின் கவனத்திற்கோ நீதி மன்றத்தின் கவனத்திற்கோ எடுத்து செல்ல நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் நேரம் கிடையாது.ஆனால் நம்முடைய விவசாய சங்கங்கள் ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை.  

விவசாயிகள் மீதும் அப்பாவி கிராம மக்கள் மீதும் தொடர்ந்து நடத்தப்படும் இது போன்றத் தாக்குதல்கள் என்றைக்கு நிறுத்தப்படுகிறதோ அன்றக்குத்தான் இந்த நாடு உருப்படும்!