செவ்வாய், 11 ஜனவரி, 2011

கமலஹாசனுக்கு என்ன ஆச்சு

மன்மதன் அம்பு படத்தினால் பல பேர் காயப்பட்டிருக்கிறர்கள். இந்து மத கடவுள்கள் கேவலப்படுத்தப் பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சியினர் எதிப்பு தெரிவித்தனர். ஈழத்தமிழர்கள் இழிவுப் படுத்தப்பட்டுள்ளதாக வருத்தப்படுகிறார்கள்.தமிழை கேவலப்படுத்தியுள்ளதாக சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இளையராஜாவிற்க்குப் பிறகு அந்த இடத்திற்க்கு உரியவர் தேவி பிரசாத் மட்டுமே என்று கூறி ஏ. ஆர். ரஹ்மான் ரசிகர்களின் எதிர்ப்புகளையும் சம்பாதித்து கொண்டுள்ளார்.தற்போது விகடன் கேள்வி பதில் பகுதியில் " இந்துக்களின் அனுமதியுடன் தன் கவிதை நூல் வெளிவரும்" என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.இவருடைய மன்மதன் அம்பு படத்தின் அந்தஆபாசக் கவிதையை இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நூறு பேர் மட்டுமே எதிர்த்தார்கள்.மற்ற இந்துக்கள் கமலஹாசன் எப்பொழுதும் இதுமாதிரியான கிறுக்கு வேலைகளை பப்ளிசிட்டிக்காக செய்துகொண்டிருப்பார் என தெரிந்து அமைதியாகத்தான் இருந்தார்கள். ஆனால் என்னவோ ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தவரும் இவரை எதிர்த்த மாதிரி இந்து மக்கள் அனுமதியுடன் வெளியாகும் என்று கிண்டலடிக்கிறார். ஏன் கமலஹாசனுக்கு என்னவாயிற்று?

கமலஹாசனை தொடர்ந்து கவனித்து கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று நன்குப் புரியும். அவர் அவருக்கே தெரியாமல் சில உளவியல் பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறார். சின்ன வயதில் முறையான கல்விப் பயில இயலாமையினால் ஒரு தாழ்வு மனப்பான்மையிலேயே இவர் வளர்ந்திருக்கிறார். அதன் காரணமாகவே சுஜாதா , பலகுமாரன், வாலி போன்றவர்களுடன் பழக ஆரம்பித்த பின் தன்னை ஒரு இண்டலெக்ட்டாக காட்டிகொள்வதற்க்காக யாருக்கும் புரியாத மாதிரி பேச ஆரம்பித்தார். சினிமாவில் அதிகமாயிருக்கும் ஜால்ராக்கள் அதை ஊக்குவிக்க , தான் பெரிய இண்டலெக்ட்தான் என்று அவரே நம்ப ஆரம்பித்தார். முறையாகப் படிக்காவிட்டாலும் தனக்கு ஆங்கிலமும் பேச வரும் என்று காட்டிகொள்ள திரைப் படங்களுக்கு உள்ளேயும் வெளீயேயும் வாயை ஒரு மாதிரி கோணலாக வைத்துகொண்டு ஆங்கிலம் பேசினார்.தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்க்காக தன் படங்களில் முத்த காட்சிகளை வேண்டுமென்றே திணித்தார். திராவிட இயக்கங்களின் ஆளுமையில் இருந்த தமிழ் திரைஉலகில் தான் ஒரு பார்ப்பனர் என்று காட்டிகொள்வதில் அவருக்கு ஒரு காம்ப்லெக்ஸ் ஏற்படவே தான் பெரியாரின் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டதாக கூறி நாத்திகராக தன்னை அறிவித்துக் கொண்டார்.ஆனால் சத்தியராஜை ஏற்றுக் கொண்டமாதிரி இவரை ஏற்றுக் கொள்ள வீரமணி & கோ முன்வரவில்லை.ஏன் என்றால் அவர்களுக்கு ஒரு பார்ப்பனர் திடிரென்று இப்படி மாறுவது நம்பிகைக்கு உரியதல்ல என நினைத்தார்கள். இருந்தாலும் கலைஞருடன் நட்பை வளர்த்துகொண்டு அவ்ருடைய வழியில் பதுகாப்பான நாத்திகர் ஆனார். கலைஞரின் நாத்திகம் என்பது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது. மற்ற மதத்தை எதிர்த்தால் பிரச்சனையாகிவிடும். ஓட்டு விழாது. இந்து மதத்தைப் பொருத்தவரை சில ஜாதிகளை சரி செய்துகொண்டால் போதும் என்பதுதான் கலைஞரின் வழி.அதை அப்படியே பின்பற்றி தன்னுடைய அத்தனை படங்களிலும் இந்து மதத்தவர்களை கேவலமாக சித்தரிக்க ஆரம்பித்தார்.

கடவுள் இல்லை என்று சொல்வதன் மூலம் தன்னை ஒரு பெரியாராகவும், Betrand Russel ஆகவும் Bernard Shaw ஆகவும் நினைத்து கொள்கிறார்.. ஆனால் அவர்கள் எல்லாம் உண்மையான நாத்திகர்கள். எந்த மதத்து கடவுள்களையும் ஏற்காதவர்கள். இவர்களைப் போல ஒரு மதத்திற்க்கான எதிர்ப்பாளர்கள் இல்லை.

அடுத்து, கமலஹாசன், தான் மற்றவர்களை விட ஒரு படி உயர்ந்தவர் என்ற மன பிறழ்வுக்கு ஆளாகியிருக்கிறார். உலக அளவில் எதையும் சாதிக்காத அவருக்கு உலக நாயகன் பட்டம் எல்லாம் கொடுத்து அவரை இந்த நிலைக்கு ஆட்படுத்திவிட்டர்கள்.அதனால் இந்திய சினிமாவில் தன்னை விட பெரிய ஆட்கள் யாருமில்லை என்று அவர் நம்புகிறார். அதனால் தான் வேறு யாராவது பாரட்டப்பட்டால் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆஸ்கர் அவார்ட் தனக்குதான் முதலில் கிடைக்கும் என்று ஒரு குருட்டு நம்பிக்கையில் இருந்தவருக்கு, தனக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.

ஆஸ்கர் அவார்ட் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கிடைத்ததை அவரால் ஏற்றுக் கொள்ள் முடியவில்லை. ஏதாவது ஒரு வகையில் அவரை கேவலப் படுத்த எண்ணித்தான் தேவி பிரசாத்தைப் பாராட்டியிருக்கிறார்.

கமலஹாசன் ஒரே நேரத்தில் superiority complex, inferiority complex இரண்டாலும் அவஸ்தைப் பட்டு கொண்டிருக்கிறார். கமலஹாசன் தற்பொழுது செய்து வரும் இத்தகையான காரியங்களை, அவரது உளவியல் பிரச்சனைகளின் காரணமாகத்தான் செய்து வருகிறார் என்பதை நன்கு உணர முடிகிறது.