புதன், 1 மார்ச், 2017

தேவை அடிப்படை அரசியல் மாற்றங்கள்



பிஜேபியின் உறுப்பினரான திரு வருண் காந்தி, எம் எல் ஏ மற்றும் எம் பிக்களைத் திரும்ப அழைப்பதற்கான சட்டம் இயற்றக் கோரி தனி நபர் மசோத ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான ஒரு சட்டம் இய்ற்றுவது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் எனத் தெரியவில்லை. ஆனால் நமது அரசியல் சட்டத்தில் அடிப்படையான சில மாற்ற்ங்களை செய்ய வேண்டியது காலத்தின் கட்டயமாகிறது. நம்முடைய சட்டம் அரசியல்வாதிகளில் 80% யோக்கியர்களாயிருந்த போது வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலைமை அப்படியில்லை. எனவேதான் கீழ் கண்ட மாற்றங்களை கொண்டுவர அரசுத் தீவிரமாகப் பரீசிலனை செய்ய வேண்டும்.

1. தேர்தல்கள் 4 ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.

2. ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டிற்குள் மரணமடைந்தாலோ       அல்லது பதவி விலகினாலோ மட்டுமே இடைத் தேர்தல் நடத்தப்பட        வேண்டும். ஓராண்டிற்கு மேலாகிவிட்டால் அந்தத் தொகுதியின் பொறுப்பை    பக்கத்துத் தொகுதி உறுப்பினர் வசம் ஒப்படைக்கலாம்.

3. ஒரு நபர் இரண்டு தடவைக்கு மேல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்          கூடாது.

4 ஒருவர் ஏதேனும் ஒரு குற்ற வழக்கில் ஏதேனும் ஒரு நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டால் அவர் மேல்முறையீடுகளில் நிரபராதி என விடுவிக்கப்படும் வரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

5. அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகள் மொத்தமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் 75% தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியாக வேண்டும். அதே போலவே மா நில கட்சிகள்  75% சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும்.

6. சட்ட மன்றம் அல்லது நாடாளுமன்றம் ஆகியவற்றில் உறுப்பினராக இல்லாதவர்கள் அமைச்சர்களாகவோ முதல்வராகவோ பிரதமராகவோ அல்லது வேறு பதவியிலோ அமர்த்தப்படக் கூடாது.

7. உறுப்பினர்களின் தேர்வுத் தொடர்பாக குறித்து வழக்குகள் எதேனும் வருமாயின் அந்த வழக்குகளை உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு நீதி மன்றம் அமைத்து இரு மாதங்களில் தீர்ப்பு வழங்கப் பட வேண்டும். மேல் முறையீடுகள் அனுமதிக்கப்படக் கூடாது. வழக்கு முடியும் வரை  அந்த உறுப்பினரின் நடவடிக்கைகளைத் தடை செய்ய வேண்டும். மன்ற நடவடிக்கைகளில் வாக்களிக்கவும் அனுமதிக்கக் கூடாது.

8.ஒன்றுக்கும் உதவாத ஆளுனர் பதவியை அகற்ற வேண்டும். அசாதரண சூழ் நிலைகளில்  அந்தந்த மா நில உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியை குடியரசுத் தலைவரின் பிரதி நிதியாக நியமித்து  பிரச்சனைகளத் தீர்க்கலாம். 

9. நாடாளு மன்றம் மற்றும் சட்ட மன்ற நடவடிக்கைகளை முடக்குகின்ற உறுப்பினர்களை உடன் பதவி நீக்கம் செய்வதுடன் அவர்கள் அடுத்த பத்தாண்டிற்குத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 

10. ஒரு முறை போட்டியிட்டு 5% குறைவாக  வாக்கு பெறுபவர்களை அடுத்த இரண்டுத் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

இது போன்ற இன்னும் பல மாற்றங்களை பொது மக்களிடமிருந்துப் பெற்று அவற்றை நடைமுறைபடுத்த வேண்டும்